இந்து சமய அறநி லைத்துறை சார்பில் தர்மபுரியில் நேற்று 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுக்கு 2 கிராம் தங்கத் தாலி மற்றும் 30 வகை சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் விதம் 20 மண்டலங்களில் ஆண் டுதோறும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
அதன் படி சேலம் இணை ஆணையர் மண்டலத்துக் குட்பட்ட தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக நேற்று 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுன சாமி கோவிலில் நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தலை மையில் அந்தந்த மணமக்களின் உறவினர்கள் முன்னிலையில் 5 ஏழை ஜோடிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த 5 ஏழை ஜோடி களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா மற்றும் மணமக்கள்-உறவினர்களுக்கு விருந்து வழங்கும் விழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் திருமண மண் டபத்தில் நடைபெற் றது.
விழாவுக்கு இந்து சமய அறநிலைத்துறை சேலம் மண்டல நகை சரிபார்ப்பு இணை ஆணையர் சபர்பதி தலைமை தாங்கினார்.
தர்மபுரி இந்து சமய அறநிலைத்துறை
தர்மபுரி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உதயகுமார் முன்னிலை வகித்தார். அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் வரவேற்று பேசினார்.
விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு 30 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினர். விழாவில் கோவில் ஆய்வாளர்கள் சங்கர், மணிவண்ணன், சங்கர் கணேஷ், பெரமன், கோமதி, துரை, கோட்டை கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமாரசாமிப்பேட்டை கோவில் செயல் அலுவலர் ராதாமணி நன்றி கூறினார்.
இந்து சமய அறநிலைத் துறை சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்ட 5 ஏழை ஜோடிகளுக்கும் தலா ரூ. 20,000 மதிப்புள்ள 2 கிராம் தங்கத்தாலி, 5 கிராம் வெள்ளி மெட்டி, முகூர்த்த புடவை, ரவிக்கை, பட்டு ஜரிகை வேட்டி, பட்டு ஜரிகை துண்டு, பட்டு சட்டை, மற்றும் பித்தளை குத்து விளக்கு, குங்குமச்சிமிழ், மெத்தை-தலையணை உள்ளிட்ட 30 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.