fbpx
Homeதலையங்கம்சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா கவுரவம்!

சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா கவுரவம்!

இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். 16 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர், அதன் பின்னர் செய்தது எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.

அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் என கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். அதோடு ஒரு நாள் போட்டியில் 200 அடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அதை கடந்து அனைத்தும் முடியும் என்று நிரூபித்தார்.

அப்படிப்பட்ட சாதனைகளை கொண்ட சச்சின் டெண்டுல்கர் தனது 47 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு உலகளவில் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ள சச்சினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை சிட்னி கிரிக்கெட் மைதானம் கவுரவித்துள்ளது.

அதன்படி சிட்னி மைதானத்தின் வாயிலுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வாயிலை கடந்தே வீரர்கள் மைதானத்துக்குள் வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 241 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் சச்சினின் பேட்டிங் சராசரி 157 ஆகும்.

அதோடு இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று என்று சச்சின் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சச்சினை நாமும் வாழ்த்துவோம் & ஆஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவிப்போம்!

படிக்க வேண்டும்

spot_img