கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் இடையர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.