கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பிபிஏ ஐபி துறை மாணவி நீதிசாய், மே 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை தமிழ்நாடு அரசு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாட்டின் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு, பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட் டையர் பிரிவுகளில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் போட்டிக்காக ரூ.5000 பரிசுத்தொகையும், இரட்டையர் போட்டிக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.2500 பரிசும் கோப்பைகள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
சாதனை மாணவி நீதி சாயை கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.