ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரட்டை கொலை சம்பவத்தில் அரசாங்கம் கவனக் குறைவாக இருந்தால் சிபிஐ விசாரணைக்கு போகலாம் என சொல்லலாம். தமிழக காவல்துறை வலுவாகவும் திற மையாகவும் இருந்துள்ளது. எனவே கண்டிப்பாக தமிழக காவல்துறை கண்டுபிடித்து விடு வார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் முத்து சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்து பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி வயதான தம் பதியினர் அடுத்து கொலை செய்யப்பட்டு 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் 12தனிப் படைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இறந்தவர்க ளின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, தம்பதியின் மகன் கவிசங்கர், மகள் பானுமதி மற்றும் உறவினர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது காவல்துறையின் நடவடிக்கைகள் இன்னும் வேகப்படுத்த வேண்டும். விரை ந்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் இனி இது போன்ற சம்பவம் நடக்காத வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் இழப்பீடு கொடுக்கும் தமிழக அரசு இந்த சம்பவத்திலும் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற அடுக்கடுக்கான கோரிக்கைகளை மகன் கவிசங்கர் அமைச்சர் முத்துசாமியிடம் தெரிவித்தார்.
இதன் பின்னர் கொலை நிகழ்ந்த இடத்தினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆறுதல் கூறி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, இங்கு நடந்த சம்பவம் வருத் ததிற்கும் வேதனைக்குரிய விஷயம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. முதல்வர் இச்சம்பவம் குறித்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பினர், ஐஜி, டிஐஜியிடம் பேசியுள்ளார். மேல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிஏபி,எல்பிபி வாய்க்கால் அருகே பல்வேறு இடங்களில் வீடுகளை வெளியே இருந்து வரும் நபர்கள் கண்காணித்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வாய்க்கால் வழியே தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளது. இரண்டு வாய்க்காலில் 1660 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 552 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.கூடுதலாக கேமரா பொருத்தப்பட வேண்டும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பவர்களிடையே சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அது சாத்தியம் இல்லை என்றும் அரசின் சார்பில் கேமரா பொருத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வாய்க்கால் கரையை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும் எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். குடும்பத்திற்கு எற்பட்டிருக்கும் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தனிப்பட்ட முறையில் விரைவாக காவல்துறையினர் குற்றவாளி களை கண்டுபிடிப்பார்கள் உரிய தண்டனை பெற்று தருவார்கள். இரண்டு வாரங்களில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை என்றால் பாஜக சார்பில் தொடர் உண்ணாவிரதம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்திருப்பதை சரி, தவறு என கூறவில்லை என்றும் விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம் என்றார்.
காவல்துறையினர் கண்டு பிடித்ததை வெளியிடுவது விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் வெளியிடவில்லை. அரசியல் செய்ய விரும்ப வில்லை. அரசாங்கம் கவனக் குறைவாக இருந்தால் சிபிஐ விசாரணைக்கு போகலாம் என சொல்லலாம். தமிழக காவல்துறை வலுவாகவும் திற மையாகவும் இருந்துள்ளது. எனவே கண்டிப்பாக தமிழக காவல்துறை கண்டுபிடித்து விடு வார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. சிபிஐ விசாரணை அவசியம் இருக்கும் பட்சத்தில் மேலிடத்தில் யோசிப்பார்கள் என்றார்.