fbpx
Homeபிற செய்திகள்குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 63க்குட்பட்ட ராமநாதபுரம், ஒலம்பஸ், பெருமாள் கோயில் வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உடன் பணிகள் குழுத்தலைவர் சாந்திமுருகன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி பொறியாளர் நடராஜன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img