fbpx
Homeபிற செய்திகள்நியூரோடைவர்ஸ் பாதிப்படைந்தவர்களை மேம்படுத்த கோவையில் சமூக கருத்தரங்கம்

நியூரோடைவர்ஸ் பாதிப்படைந்தவர்களை மேம்படுத்த கோவையில் சமூக கருத்தரங்கம்

நியூரோவெல் இன்சைட்ஸ் மற்றும் தேர்ட் ஐ – ஆட்டிசம் மையம் சார்பாக நடைபெற்றது

நியூரோடைவர்ஸ் எனும் நரம்பியல் குறைபாடு தொடர்பான நோய்களால் பாதிப்படைந்தவர்களை சமூகத்தில் அங்கீகாரம் மற்றும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பான நியூரோயுனிட்டி எனும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவை கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நியூரோவெல் இன் சைட்ஸ் மற்றும் தேர்ட் ஐ & ஆட்டிசம் மையம் இணைந்து நடத்திய இதற்கான துவக்க விழா, நியூரோவெல் இன்சைட் ஸின் நிறுவனர் பவின் கிருஷ்ணராஜ் ஒருங்கிணைப் பில் நடைபெற்றது.

இதில், சரணாலயத்தின் நிறுவனர் வனிதா ரெங் கராஜ், தேர்ட் ஐ&ஆட் டிசம் மைய இயக்கு னர் சரண்யா ரங்கராஜ், மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நரம்பியல் தொடர் பான நியூரோ டைவர்ஸ் பாதிப்படைந்த பெரிய வர்களை சமூகத்தில் அனைத்து தரப்பினரும் அங்கீகரிக்கும் வகை யில் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது, மேலும் தொழில் முறை சார்ந்து அவர்களை சமூகத்தில் எவ் வாறு மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து தீர்வுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக நியூரோ டைவர்ஸ் நோயால் சமூக தொடர்பு மற்றும் தொடர்பு கொள்ளலில் சிரமங்கள், கவனக்குறைபாடு, அதிக சுறுசுறுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை இல்லாத தன்மைபோன்ற தன்மைகளுக்கு முறை யான பயிற்சிகள் வழங்கி அவர்களை சமூகத்தில் தாமாக இயங்க தன்னம்பிக்கை அளிப்பதற்கான புதிய முயற்சியாக இந்த மாநாட்டை நடத்துவதாக சரண்யா ரங்கராஜ் தெரிவித்தார்.

நரம்பியல் பன்முகத் தன்மை கொண்ட பெரிய வர்களை மேம்படுத்து வதற்கான தொழில் மற்றும் சமூக பாதைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், நிபுணர்கள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img