கோவை திருச்சி சாலை, சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தின் மூலமாக கிருஷ்ணகிரி


மாவட்டத்தில் உள்ள தளபதி நகர் பகுதியில் சிஎம்எம் (CMM) ஊழியத்தினோடு இணைந்து புதிய ஆலயம் கட்டப்பட்டது.

இந்த ஆலயத்தை நேற்று (12ம் தேதி) சிஎம்எம் ஊழியத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் அர்ப்பணிக்கும் வகையில் ஆலயத்தின் தலைமை ஆயர் ராஜேந்திரகுமாரால்

பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் முன்னாள் ஆயர் எபினேசர் மணி ஆயர், திருச்சபையின்

பொருளாளர் ஜெ.ஏ.பரமானந்தம், அருண் ஆனந்தராஜ், சிஎம்எம் ஜஸ்டின், ஜாஸ்மின் ஜாக்சன், பெனிட்டா, விஜயகுமார், காட்வின் கோயில் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



