fbpx
Homeபிற செய்திகள்ஆன்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது

ஆன்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில், செலிப்ரேட்டெக்ஸ் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

2 முதல் 5 வயது குழந்தைகள் 500 மீட்டர் தொலைவும், 6 முதல் 10 வயது வரை 800 மீட்டர் தொலைவில், இறுதியாக 11 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 கிலோ மீட்டர் என பிரிவிற்கு ஏற்றார் போல் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

போட்டியானது டெக்ஸ்வேலி வளாகத்தில் தொடங்கி ஈரோடு கோவை செல்லும் நெடுஞ்சாலை வரை சென்று திரும்பினர்,
போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, பதக்கங்களும் சான்றிதழ்களையும் கோப்பைகளையும் செலிப்ரேட்டெக்ஸ் ஒருங்கிணைப்பாளர் அப்துல் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img