உடல் பருமன் தொடர் பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது.
உடல் பருமனால் உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், உடல் பருமனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் கோவை விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை மற்றும் கோவை அத்லடிக் கிளப் சார்பில், 4வது ஆண் டாக உடல் பருமன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்ட பந்தயம் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.
வி.ஜி.எம். மருத்துவ மனை நிறுவனர் மற்றும் மருத்துவரான வி.ஜி. மோகன்பிரசாத், முன் னாள் சட்டமன்ற உறுப் பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கொடி யசைத்து உடல் பருமன் விழிப்புணர்வு மாரத் தானை தொடங்கி வைத் தனர். 3,200 பேர் பங் கேற்ற இந்த மாரத்தான் போட்டியில், 10கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றன.
இதில் வீல்சேர் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் பங் கேற்று ஓடினர். மராத் தான் போட்டி வளாகத்தில் மூத்த கேஸ்ட்ரோ என் றால் ஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் மற்றும் ஆர்த்தோ மருத்துவர் சுமன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இது பன்மடங்கு உயர்ந் திருக்கின்றது.
11% முதல் 30 % அதிகரித்து இருக்கின்றது. கிராமப்புறத்தை விட நகர்புறத்தார் உடல் பருமனால் அதிக அள வில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
துரித உணவு உட்கொள்ளுதல், நேரத்திற்கு உணவு உட் கொள்ளாமல் இருத்தல், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட நவீன வாழ்வியல் முறையால், உடல் பருவனால் பொது மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்த ஆரம்பித்திருக்கின்றனர்.
கொழுப்பு படிந்த கல்லீரல், ஹார்ட் அட்டாக் , உடலில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் உடல் உபாதைக்கு உள் ளாகியிருக்கின்றனர். இளம் வயதினரையும் பாதிக்க ஆரம்பித்து இருக்கின்ற இந்த உடல் பருமன் பிரச்சினை, குழந் தைகளையும் விட்டு வைக்க வில்லை.
வழக்கமாக ஒரு குழந்தை சிகிச்சைக்கு வந்த இடத்தில், சமீப காலமாக ஐந்து குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றார்கள். உடற்பயிற்சி இல்லாததும், போது மான உடல் சார்ந்து விளை யாட்டு இல்லாததும், செல்ஃ போனில் நேரங்களை செலவிட்டு குழந்தைகள் விளையாடாமல் இருத்தல் போன்றவைகளே பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைந்தன.
உடல் பரு மனால் உடலில் எலும்பு தேய்மானத்துடன், எலும்பு பலவீனமடைகின்றன. உடல் பருமன் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழ் வதற்கு ஏதுவாக, நவீன வாழ்வில் உடற்பயிற்சி, சத்தான உணவு கொள் ளுதல் உடல் நலன் பேண அவசியம். இவ்வாறு அவர் கள் அறிவுறுத்தியிருக்கின்றார் .
இந்த மராத்தான் போட்டியில் மூத்த கேஸ்ட்ரோ மருத்துவர்களான வி.ஜி. மோகன் பிரசாத், கோகுல் கிருபா சங்கர், ஆர்தோ மருத்துவர் சுமன், கேஸ்ட்ரோ மருத்துவர்களான மதுரா சுமன், வம்சி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.