மூட்டு வலியை போக்கும் அதிநவீன ரோபோடிக் சிகிச்சை நாமக்கல் அர்விந்த் மருத்துவமனையில் ஏ.ஐ.ரோபோட்டிக் அறு வை சிகிச்சை அறிமுக விழா நடைபெற்றது.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், இந்தியன் வங்கி அருகில், மணி மருத்துவமனை என்ற ழைக்கப்படும் அர்விந்த் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த 1976–ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை தற்போது நவீன மயமாக்கப்பட்டுள்ளது.
இங்கு ஏ.ஐ. ரோ போட்டிக் அறுவை சிகிச்சை மற்றும் 4 கே ஆர்த்ரோஸ்கோப்பி என்ற நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப் பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்ட மன்ற உறுப்பினர் பெ.ராம லிங்கம், நகரமன்றத் தலைவர் கலாநிதி, அரசு மருத்துவக்கல்லூரி முதன் மையர் கே.சாந்தா அருள்மொழி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டு, இந்த மருத்துவமனையின் சிகிச்சை முறைகளை பாராட்டியதுடன், நவீன கருவிகள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முறைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த விழாவில், பல்வேறு தனியார் மருத்துவமனைகளை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அர்விந்த் மருத்துவமனையின் இயக்குனர்களான மருத்துவர்கள் கே.மணி, தனபாக்கியம், சிவகுமார் மணி, சுகித்ரா சிவக்குமார், திவ்யாராஜேஸ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகத் தினர் செய்திருந்தனர்.