மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு மாநகரம் பகுதியில் வெள்ளியங்காடு நால் ரோட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் கமல் ஜீவா, தெற்கு மாநகர செயலாளர் தர்மராஜ், மாநகர செயலாளர் மாரிமுத்து, வார்டு செயலாளர் ஜெயபால், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் தாமரைச்செல்வி, சுரேஷ், பெருமாள், பாபு ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.



