கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பாரதி பூங்காவில் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், மத்திய மண்டல உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் உள்ளனர்.



