கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுசுகாதாரப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20-ம் தேதி முதல் வரும் 25-ம் தேதி வரை முழு சுகாதார பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில், கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் மாபெரும் தூய்மைப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தற்போது இப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.



