fbpx
Homeதலையங்கம்பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணிப்போம், வாரீர்!

பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணிப்போம், வாரீர்!

பிரதமர் நரேந்திர மோடி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022 ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்ற தெளிவான அழைப்பு விடுத்த நிலையில், இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளை அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு பொருளாக உள்ளது. தற்போது கண்ணுக்கு எட்டியவரை ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்கள் என பார்க்க முடிகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை மறுசுழற்சியும் செய்ய முடியாத நிலையில், அவற்றின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், ஜூலை 1, 2022 முதல் நாடு முழுவதும் குறைந்த பயன்பாடு மற்றும் அதிக குப்பைகளை ஏற்படுத்தும் வகையிலான, சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை இந்தியா தடை செய்கிறது.

கடல் சூழல் உட்பட நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதகமான விளைவுகள் உலகளவில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசுபாட்டை நிவர்த்தி செய்வது அனைத்து நாடுகளையும் எதிர்கொள்ளும் முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக மாறியுள்ளது

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் பிளாஸ்டிக் குச்சிகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன் (தெர்மாகோல்), பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், ஃபோர்க்ஸ், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்வீட் பாக்ஸ்களைச் சுற்றி பேக்கிங் செய்தல், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவை அடங்கும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அரசோடு இணைந்து பொது மக்களான நாமும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதில் பங்கெடுப்போம்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாங்காமல் & பயன்படுத்தாமல் புறக்கணிப்போம். பிரதமரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img