நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை யில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு ஆதரவாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினர்.



