கங்கா செவிலியர் கல்லூரி சார்பாக நேற்று (நவ.16) ‘சிறுநீரக சுகாதார முன்முயற்சிகளின் நடைமுறைச் சட்டம்’ என்ற தேசிய மாநாடு நடைபெற்றது.
நோயுற்ற தன்மையைத் தடுப்பதற்கும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்ப டுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரப் பாதுகாப்பு எல்லைகள் பொறுப்பாகும்.
காலத்தின் தேவை கருதி, இம்மாநாடு சிறுநீரக ஆரோக்கியத் துறையில் தடுப்பு, சிகிச்சை மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய பல தரப்பட்ட அறிவைக்கொண்டு அமைக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் செவிலியர் துறையில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்களின் அறிவியல் சார்ந்த சிறப்புரைகள் குறிப்பிடத்தக்கது
மாநாட்டில் 500-க்கும் மேற்பட்டபிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கங்கா செவிலியர் கல்லூரி நிர்வாக அறங்கா வலர் ரமா ராஜசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான், மாநாட்டின் முன் னுரையை வெளியிட்டார்.
பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவு
கோவை கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ராஜ சபாபதி சிறப்புரை ஆற்றினார். கோவை வேதநாயகம் மருத்துவமனை நிறுவனர் சிறப்பு விருந்தினர் டாக்டர் எஸ்.வி.கந்தசாமி, சிறந்த சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சரியான அறிவின் முக்கி யத்துவம் குறித்த முக்கிய குறிப்புகளை எடுத்துரைத்தார்.
நேபாளத்தைச் சேர்ந்த பூர்பாஞ்சல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் பிரமிளா தாபாவின் சிறுநீரக நலம் மற்றும் முதியோர் பராமரிப்பு குறித்த அமர்வுகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மற்ற அனைத்துப் புகழ்பெற்ற பேச்சாளர்களின் உயர் தரமான தகவல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதிநிதிகள் கூறினர்.
மாநாடு சிறந்த சிறுநீரக பராமரிப்புக்கான புதுமையான சான்றுகளை உள்ளடக்கியதாகவும், சரியான அறிவை மாற்றியமைக்கும் வகையில் பயனுள்ளதாகவும் இருந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த அறிவியல் கட்டுரை மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகள் அங்கீகரிக்கப்பட்டன. சிறுநீரகம் பற்றிய மறைக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் கொண்ட குகை மற்றும் விளையாட்டு மூலை அனைத்தும் மாநாட்டின் சிறப்பம்சமாக இருந்தது.
அமர்வுகள் மாலை நிறைவடைந்து, மாநாட்டு அறிக்கையை வழங்கினர்.
பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



