கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலநிலை மாற்றத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு உத்தரவின்பேரில்,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், வரும் காலங்களில் காலநிலையை சீராக்கிடும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகரங்களில் காற்றின் மாசு கணக்கீடு மற்றும் சுத்தமான, சுகாதாரமான வாயு குறிக் கோளுக்கான திட்டங்கள், பருவநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண்மை முறைகள், இயற்கை விவசாய முறைகள் மூலம் விவசாயத்தில் நிலைத் தன்மையை பெறும் வழிகள், நீர் மேலாண்மை திட்டங்கள், வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பு நுட்பங்கள், பசுமை கட்டிட உத்திகள் மற்றும் கட்டுமானத்தில் நிலைத்தன்மை குறித்து அலுவலர்க ளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மட்டுமன்றி, அனைத்து அரசு துறைகளும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களின் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் அனைத்து துறை களும் மரகன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். கட் டிட பணிகளில் பசுமை கட்டிட உத்திகளை கடைபிடிக்க வேண்டும். இது சூழலியல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வழியாகும்.
காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறு சுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற நடவடிக்கை கள் மூலம் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து வாழ்வில் மேன்மையடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் எஸ்.குருசாமி, புதுச்சேரி ஆரோவில் நிறுவனத்தை சேர்ந்த அரவிந்தன் மற்றும் ராகவ் நந்தகுமார், விருத்தாசலம் ஜி.காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.