fbpx
Homeபிற செய்திகள்மாநகராட்சி பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

மாநகராட்சி பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்கின்ற தலைப்பில், மாவட்ட கனிமவள நிதி மற்றும் NTP நிறுவன சமூகப் பொறுப்பு நிதி ஆகியவற்றிலிருந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

திமுக துணைப் பொதுச் செயலா ளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும் மற்றும் ரூ 2.55 கோடி மதிப்பீட்டில் மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img