fbpx
Homeபிற செய்திகள்மரம் நடும் பணியை துவக்கி வைத்த தூத்துக்குடி மேயர்

மரம் நடும் பணியை துவக்கி வைத்த தூத்துக்குடி மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 27 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள ஸ்டெம் பார்க்கில் 200 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 100 மரங்கள் நடும் பணியினை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) மருத்துவர் தினேஷ், பகுதி திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், திமுக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, ஜெயசீலி, தெய்வேந்திரன், நாகேஸ்வரி, அந்தோணி, மார்ஷலின், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img