உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு கோவை ஆர். ஏஸ். புரம் தபால் நிலையம் அருகில் அமைந்துள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்தும் காவல் துறை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இன்று (12ம் தேதி) இலவச கண் மருத்துவ முகாமை நடைபெற்றது.
இதன் துவக்க விழா டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு கோவை மாநகர போக்கு வரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சிற்றரசு டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். சுனில் ஸ்ரீதர் முன்னிலையில் துவக்கிவைத்தார்.
விழாவில்கோவை மாநகர போக்கு வரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சிற்றரசு பேசும்போது, “ போக்கு வரத்து காவலர்கள் வெயில், மழை மற்றும் தூசு அதிகம் உள்ள பகுதியில் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்‘’ என்று கூறினார்.
விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் துணை தலைவர் ஜான்சன் விஜய் மேத்யூ மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை மற்றும் டாக்டர்கள் அனுஷா, மும்தாஜ் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.