fbpx
Homeபிற செய்திகள்மாப்பிள்ளையூரணியில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு

மாப்பிள்ளையூரணியில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் பந்தலை ஊராட்சி மன்ற தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணகுமார் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட எம்.சவேரியார் புரம் பிரதான சாலை, தாளமுத்து நகர் ஆர்.சி ஆலயம் எதிரில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு விழா நடந்தது. திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணகுமார் முன்னிலையில் ஆர்சி ஆலய உதவி பங்கு தந்தை அமல்ராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பி.ரவி என்ற பொன் பாண்டி, அவை தலைவர் ஜோசியர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், ஒன்றிய கவுன்சிலர் பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசு ராஜா, சக்திவேல், வசந்தகுமாரி, கிளைக் கழக செயலாளர் முருகன், வேல்ராஜ், சந்திரசேகர், ஜோதிபாசு நகர் கிளைச் செயலாளர் வேல்ராஜ், மகளிர் அணி சண்முகத்தாய், மாரியப்பன், சமீர் வியாஸ் நகர், திமுக இளைஞரணி கௌதம், செல்வகுமார் உட்பட கழக முன்னோடிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img