fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்வி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் சேர்க்கும் பணி தீவிரம் ஆட்சியர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்வி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் சேர்க்கும் பணி தீவிரம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை

பள்ளிக் கல்வித்துறை இணையதள தகவல் தொகுப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 5156 குழந்தைகள் பள்ளி இடைநின்ற / பள்ளிக்கு வராத குழந்தைகளாக கண்டறியப்பட்டனர். இவர்களில் 1001 குழந்தைகள் நேரடி சேர்க்கை மூலம் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுரைப்படி மீதமுள்ள 4155 குழந்தைகள் சார்ந்த தகவல்கள் சரிபார்த்து பள்ளியில் சேர்க்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிச்செல்லா இடை நின்ற மாணவர்களை கண்காணிக்க கட்டுப் பாட்டறை அமைக்கப்பட்டு உள்ளது. இடைநின்ற குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாகவும், குழந்தை திருமணத்திற்கு உள்ளானவர்களாகவும் இருக்கின்றனர்.
எனவே, இவர்களை விரைந்து கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்தல் அவசியம் என கருதி, இந்த பணியினை விரை வுப்படுத்தும் பொருட்டும் எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறை செயல்படத் தொட ங்கி இருக்கிறது.

இந்த கட்டுப்ப £ட்டறையில் பணியாற்றும் அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆய்வு செய்து பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விவரத் தினை பெற்று பதிவு செய்வர். மேலும் மாணவ ர்களை தொடர்பு கொண்டு பள்ளியில் சேர்ந்த விபரம் மற்றும் தகவல்களை பெற்று எனது (மாவட்ட ஆட்சி த்தலைவர்) பார்வைக்கு தினசரி அறிக்கையினை வழங்குவார்கள்.

இதன் மூலம் இதுவரை 2773 குழந்தைகள் வீடு வீடாக சென்று சரிபார்த்து பள்ளிக்கல்வித்துறை ணிவிமிஷி செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய 295 குழந்தைகள் இதுவரை மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 12 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பள்ளிக்கு வராத 1616 குழந்தைகளில் 596 குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆக மொத்தம் 891 பள்ளிசெல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகளை ஆய்வு செய்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img