தேனியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விரைவு சைக்கிள் போட்டியினை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தேனி காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி மங்கையர் கரசி, நீச்சல் விளையாட்டு அலுவலர் விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் மகாகிருஷ்ணன் ஆகி யோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு ரூபாய் ஐந்தாயிரம், இரண்டாம் பரிசாக 3000, மூன்றாம் பரிசாக 2000 மற்றும் 4-ல் இருந்து 10 இடத்திற்குள் வந்த மாணவ, மாணவியருக்கு ரூ.250 பரிசாக வழங்கப்பட்டது.