fbpx
Homeபிற செய்திகள்குவாண்டம் ஸ்மால் கேப் ஃபண்ட் அறிமுகம்

குவாண்டம் ஸ்மால் கேப் ஃபண்ட் அறிமுகம்

குவாண்டம் ஏ.எம்.சி (Quantum AMC) குவாண்டம் ஸ்மால் கேப் ஃபண்டுடன் நியூ ஃபண்ட் ஆஃபரை (NFO) அறிமுகப்படுத்தியது. இதன் சந்தா இன்று (அக்.16) தொடங்கி வரும் 27-ம் தேதி நிறைவடைகிறது.

இது ஸ்மால் கேப் ஸ்டாக்குகளில் மிக அதிகமாக முதலீடு செய்யும் ஓர் ஓபன்-எண்டட் ஈக்விட்டித் திட்டமாகும். நிதி அறிமுகம் குறித்து குவாண்டம் ஏ.எம்.சி. தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் நிதி மேலாளர் சிராக் மேத்தா கூறியதாவது:

எங்கள் ஸ்மால் கேப் ஃபண்ட் நீண்ட கால மூலதன மதிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கானது. நீண்ட காலத்திற்கு, ஸ்மால் கேப் ஸ்டாக்குகள் நல்ல வருமானத்தை அளிக்கும் சாத்தியக்கூறை வெளிப்படுத்தியிருப்பதை கண்டுள்ளோம்.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வருமானத்தை உறுதி செய்வதற்காக, வளர்ச்சி வாய்ப்புகளுடன் குறைவாக அறியப்பட்ட, ஸ்மால் பிசினஸ்களில் முதலீடுகளைச் செய்வோம்.

ஒரு குறிப்பிட்ட காலமாக, இந்தக் கம்பெனிகள் அவற்றின் வருவாய் மற்றும் வருமானங்களை அதிகரிக்கின்றன, இந்த அதிகரிப்பு எங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை உறுதிசெய்யலாம் என்றார்.

ஐ.வி. சுப்ரமணியம், எம்.டி மற்றும் குழுமத் தலைவர் -ஈக்விட்டிகள், குவாண்டம் ஆலோசகர்கள் – குவாண்டம் மியூச்சுவல் ஃபண்டின் (Quantum Mutual Fund) ஸ்பான்சர் கூறியதாவது: மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் உருவாகியுள்ள பல புதிய ஸ்டார்ட்-அப்கள் இறுதியில் ஸ்மால்-கேப் கம்பெனிகளாகப் பட்டியலிடலாம். பின்னர் இறுதியில் மிட்-கேப் அல்லது லார்ஜ்-கேப் இடத்தில் கணிசமான கம்பெனிகளாக வளரும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img