பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஓகே பாஸ் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், பிப்ரவரி 1 முதல் 28 வரை சிறப்பு சலுகையாக ஒரு ரூபாய்க்கு டாக்சியில் பயணம் செய்ய முடியும்.
கோவையில் அறிமுகம் செய்யப்படும் இந்த செயலியின் சிறப்புகள் குறித்து தலைமை செயல் இயக்குனர் செந்தில் கூறியதாவது:
கோவையில் ஓகே பாஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளோம்.
அறிமுகமான பின் இதுவரை 1000 பேர் பதவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளனர். இதன் முதல் சேவையாக கால் டாக்ஸி சேவையை செயல்படுத்த உள்ளோம்.
பிப்வரி 1 முதல் பிப்ரவரி 28 வரை இதில் புக்கிங் செய்து பயன் படுத்துவோருக்கு முதல 2.5 கி.மீ.,க்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம். அடுத்து வரும் கிலோ மீட்டருக்கு வழக்கமான கட்டணம் இருக்கும்.
இந்த புதிய செயலில் 50 வகையான சேவைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இலவச ஆம்புலன்ஸ் உடனும் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம் கோவை மக்களின் அன்றாட வாழ்க் கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 2025 ஆண்டுக்குள் ஒரு லட்சம் பயனாளர்களாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
விரைவில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் சேவை கள் வழங்க உள்ளோம்.
ஓகே பாஸ் செய லியால் அனைவரும் எளிதாக சேவைகளை பெற வேண்டும். முதல் சேவையாக டாக்சி சேவையின் அறிமுகமாக ரூ.1 முதல் பயண சலுகை அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.