திருப்பூரில் மாநகராட்சி பள்ளிகளுக்கு இரண்டு நாப்கின் அழிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது
இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் 44 இணைந்து கே.வி.ஆர்.நகர் மற்றும் கருவம்பாளையம் நகரவை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.30,000 மதிப்புள்ள 2 நாப்கின் அழிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் முன்னிலை வகித்தார்.
இதில் கவிதா ஜனார்த்தனன், ரம்யா என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நகர சுகாதார அதிகாரி மற்றும் மருத்துவர் கலந்து கொண்டனர்.



