47-வது ஏற்காடு கோடை விழா விரைவில் தொடங்கவுள்ளதை யொட்டி ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:
கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடைகால மலைப் பிரதேச சுற்றுலாத் தளங்களின் வரிசையில் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் இடமாக ஏற்காடு திகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை காலத் ல் ஏற்காடு கோடை விழா நடத்தப்படுவதால் பள்ளிக் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கோடை காலத்தைக் கொண்டாடிட ஏற்காடு மலைப்பகுதிக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, ஏற்காடு, அண்ணா பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு மலர்க்காட்சியும், காய்கறி கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிகள் அமைக்கப்ப டும். அந்தவகையில், ஏற்காடு கோடை விழா தொடங்குவது குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இக்கோடை விழாவில் ஓவியங்கள் உள்ளிட்ட அறிய புகைப்படக் கண்காட்சி, நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த வகையில், படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற் கொண்டு, போதிய அளவிலான குடிநீர் வசதிகள், வாகன நிறுத்து மிடங்கள், குப்பை தொட்டிகள், கழிப்பிட வசதிகள் முறையாக அமைக்கபட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஏற்காடு மலைப்பாதையில் சாலை பாதுகாப் புகள் குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பில் விழிப்புணர்வு பதாகைகள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மலைப் பாதைகளில் வாகனங்களை இயக்குவதில் அனுபவம் உடையவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
எனவே, ஏற்காடு கோடை விழாவிற்கு வருகைதரும் சுற் றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஒட்டிகள் சாலை விதிகளை முழுமையாகப்பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும் வழிகாட்டு நெறி முறைகளை தவறாமல் பின் பற்றி பாதுகாப்பான மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலு வலர் மேனகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட தொடர்புடைய பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.