கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எஸ்ஏபி நிறுவனமும் இணைந்து இரண்டு நாள் ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.
இதில் 14 மாநிலங்களில் இருந்து 75 கல்லூரிகளைச் சேர்ந்த 600 அணிகள் பங்கு பெற்றன.
ஆன்லைன் மூலம் நடைபெற்ற முதல் சுற்றில் 120 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இதற்கு நடுவர்களாக ஜோகோ, சி டி எஸ், அமேசான், போர்டு உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறந்த பத்து அணிகளை இறுதி சுற்றுக்கு தேர்வு செய்தனர்.
இந்த பத்து அணிகளில் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல் இடத்தையும், ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றது. இந்த முதல் மூன்று இடங்கள் பெற்ற கல்லூரிகளுக்கு ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த போட்டியின் இறுதி சுற்று விரைவில் நடைபெற உள்ளது.