தென்னிந்தியாவில் உள்ள தோட்ட அதிபர்கள் தங்கள் உற்பத்திகளை மதிப்பு கூட்டப்பட்டவைகளாக உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூடுதல் செயலாளர் அமர்தீப்சிங் பாட்டியா கேட்டுக்கொண்டார்.
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க 130வது மாநாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நடந்தது. உபாசி தலைவர் ஜெப்ரி ரேபெல்லோ வரவேற்றார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூடுதல் செயலாளர் அமர்தீப்சிங் பாட்டியா மாநாட்டை தொடங்கி வைத்து பேசும் போது, ‘காபி மற்றும் தேயிலை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் புதுமை புகுத்த வேண்டும்.
கனடாவில் தேனீர் மற்றும் காபி கடைகளை அமைத்த ஒரு நபர் அமைச்சர். அவருக்கு ஒரு புதுமையைத் தொடங்க தைரியம் இருந்தது. இதேபோல், தேயிலை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்துவது மற்றும் இதுபோன்ற பிற உத்திகள் உற்பத்திச் சங்கிலியில் இந்தியாவில் தோட்டப் பயிர்களுக்கு மதிப்பு சேர்க்க உதவும்.
உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தையை மற்றவர்கள் ஆக்கிரமிப்பதற்காக விட்டுக்கொடுக்காமல் இருப்பதும், அதேசமயம் உள்நாட்டு சந்தைகளுக்கான தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்யாமல் இருப்பதும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக மாநில மாற்றத்திற்கான நிறுவனத்தின் துணைத் தலைவர் எம்.வி.ராஜீவ் கவுடா, ‘நுகர்வோரின் மனதில் பிராண்டை நிறுவ வேண்டும்’ என்று கூறினார்.
கொலம்பிய காபி எவ்வாறு பிராண்ட் ஏற்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்பட்டது என்பதை விவரித்தார்.
தென்னிந்தியாவில் இருந்து இந்த பிராண்டுகளை விரிவுபடுத்த, அரசாங்கத்தின் உதவியுடன் தயாரிப்புகளின் மூலத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். இதேபோன்ற முயற்சிகள் இந்தியாவில் வளரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தேனீர் மற்றும் காபி குடிப்பதை ஆர்வமாக மாற்றும் என்றார்.
மாநாட்டில், 15-வது தங்க இலை விருதுகள் விழா நடந்தது. இதில் மத்திய வர்த்தக தொழில் துறை கூடுதல் செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில் கோடநாடு எஸ்டேட்டிற்கு ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் உற்பத்தி பிரிவில் லீப், டஸ்ட், பேனிக்ஸ் ஆகிய 3 பிரிவுகளில் 3 தங்க தேயிலை விருதுகளை எஸ்டேட் மேலாளர் நடராஜன் பெற்றுக் கொண்டார்.
சிடிசி தேயிலை தூள் பிரிவில் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு லீப், டஸ்ட், பேனிக்ஸ் ஆகிய 3 பிரிவுகளில் 3 தங்க தேயிலை விருதுகளை கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமார் பெற்றுக் கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் 6 பிரிவுகளுக்கான விருதுகளை கோடநாடு எஸ்டேட் குருப் வென்றது. கோடநாடு எஸ்டேட் கோல்டன் லீப் விருதுகளை 10 ஆண்டுகளாகவும், கிரீன் டீ எஸ்டேட் 2 முறையும் வென்றுள்ளது குறிப்பிடதக்கது.
துணை தலைவர் சி.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
மாநாட்டில் உபாசி உறுப்பினர்கள் மற்றும் தோட்ட அதிபர்கள் பங்கேற்றனர்.