fbpx
Homeபிற செய்திகள்மறுதார் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

மறுதார் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் சுகுணாபுரம், சிட்கோ பிரதான சாலை மற்றும் பிள்ளையார்புரம் சாலை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2023-24ன் கீழ் ரூ.126.78 லட்சம் மதிப்பீட்டில் (சிப்பம் 16&17) (பாலக்காடு பிரதான சாலை முதல் மதுக்கரை பிரதான சாலை வரை) 2.85கி.மீ தொலைவிற்கு மறுதார் தளம் அமைக்கும் பணிக்கு துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

உடன் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ், சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img