fbpx
Homeபிற செய்திகள்பறவைகளின் தாகத்தை தீர்க்க 1000 சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி வழங்கி விழிப்புணர்வு

பறவைகளின் தாகத்தை தீர்க்க 1000 சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி வழங்கி விழிப்புணர்வு

கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினம்,தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவைகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் மற்றும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவை இனங்களை காக்கவும், நீர் நிலைகளை அதிகரிக்கவும் ரக்சனா சமூக சேவை அமைப்பின் மூலம், ரக்சனா என்ற பள்ளி மாணவியின் தந்தை ரவீந்தரன், தாய் சங்கீதா, பள்ளி மாணவனான 2வது மகன் விஷ்வக் நித்தின் குடும்பத்தினர், பறவைகள் தண்ணீர் குடிக்க இலவசமாக தண்ணீர் தொட்டிகளையும், தோட்டங்கள் மற்றும் காடுகளில் 5 அடி மற்றும் 10 அடி அகலம் கொண்ட சிறிய கான்கிரீட் குளங்களை இலவசமாக கட்டி கொடுக்கின்றனர்.

சிறிய தண்ணீர் தொட்டியின் மூலம் தண்ணீர் ஊற்றி பறவைகளுக்கு வீடுகளிலும், தோட்டங்களிலும், காடுகளிலும் தண்ணீர் வைக்கும் பொழுது தினந்தோறும் 10 முதல் 50 பறவைகள் வரை வந்து தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது. 5 அடி, 10 அடி கான்கிரீட் குளங்கள் மூலம் அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளும், கோழிகளும் மற்றும் முயல், அணில்களும் பறவை இனங்களான மைனா, சிட்டுக்குருவி, கொக்கு, நாரை இது போன்ற அனைத்து பறவைகளும் தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றை தடுக்கும் பொருட்டு, பறவை இனங்கள் அழியாமல் தடுக்க வேண்டும்.

எனவே உலக தண்ணீர் தினத்தன்று பறவைகளை காக்க தண்ணீர் தொட்டிகளையும், 5 அடி, 10 அடி கான்கிரீட் குளங்களைவும் இலவசமாக தருகிறோம் என ரவீந்தரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img