fbpx
Homeபிற செய்திகள்காமராஜர் பிறந்தநாள் விழாவில் 500 பேருக்கு அன்னதானம்

காமராஜர் பிறந்தநாள் விழாவில் 500 பேருக்கு அன்னதானம்

சத்தியமங்கலம் நாடார் பேரவை சார்பில் காமராஜர் 121 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் மற்றும் 500பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

சத்தியமங்கலம் நாடார் பேரவை தலைவர் கேசவன் தலைமையில், செயலாளர் இஸ்ரவேல் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் 121வநு பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் அருகில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .இதனை தொடர்ந்து சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு ,புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, நாடார் பேரவை பொருளாளர் இசக்கி துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நாடார் பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img