ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிபிகே லெதர்ஸ் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பது, வாக்கிற்கு பணம் பரிசுப் பொருட்கள் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உடன் மகளிர் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், பிரீமியர் ராம் மற்றும் பிபிகே லெதர்ஸ் நிறுவன இயக்குநர் சஞ்சீவ் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.