நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், பர்லியார் ஊராட்சிப் பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ரூ.33.59 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பேரட்டி, வண்டிசோலை மற்றும் எடப்பள்ளி ஊராட்சி பகுதிகளில் ரூ.1.35 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், பர்லியார் ஊராட்சி பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 2021-2022 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.72 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கரன்சி அங்கன்வாடி மைய கட்டடத்தினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்;ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.87 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பர் லியார் நியாயவிலைக்கடை என மொத்தம் ரூ.33.59 லட்சம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார். பர்லியார் ஊராட்சிக்கு உட் பட்ட கரன்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத் தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட தடுப்புச்சுவரினையும், வண்டி சோலை ஊராட்சியில் முதல் வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.01 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் சோலாடா மட்டம் சாலை பணியினையும், பேரட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நூலக பழுது பார்ப்பு பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கல் குழியில் கட்டப்பட்டு வரும் கிணற்றினையும், எடப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்;ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10.95 லட்சம் மதிப்பில் இந்திராநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கினையும், ஆரக் கொம்பையில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12.12 லட்சம் மதப்பில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.1.35 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு மேற் கொண்டார்.
பேரட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையல் கூடத் தினை திறந்து வைத்து, பேரட்டி ஊராட்சி பகுதிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.7.2 லட்சம் மதிப்பில்
கழிவுகள் சேகரிக்கும் பிக்கப் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழக அரசால் காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் கூடலூர், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட் பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 16.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் குன்னூர் வட்டம் உலிக்கல் பேரூராட்சி, மேலூர், உபதலை ஆகிய ஊராட்சி பகுதிகளிலும், பர்லியார், எடப்பள்ளி, வண்டிச்சோலை, பேரட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் ஒப்பந்தக்காரர்கள் சரியான முறையில் செய்கிறார்களா என்று ஆய்வு செய்யப்பட்டது.
குன்னூர் ஊராட்சி ஒன்றியம், பேரட்டி ஊராட்சியில் 2021-2022, 2022-2023 ஆகிய ஆண் டுகளில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டும், நடைபெற்றும் வருகின்றன என்றார் சுற்றுலாத் துறை அமைச்சர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன குமாரமங்கலம், ஆறுமுகம், பர் லியார் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா, பேரட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.