கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
சென்னையில் கழகத் தலைவர் -தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை செயல்படுத்துகிற வகையில், கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் நாடு போற்றும் நான் காண்டு
தொடரட்டும் இது பல்லாண்டு” கழக சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
சிங்காநல்லூர்சட்ட மன்றத் தொகுதி சிங்காநல் லூர் பகுதிக்கழகம் -1 சார்பில் ஒண் டிப்புதூர் திருவள்ளுவர் நகரில் இன்று (8ம் தேதி) நடக்கும் பொதுக்கூட்டத்தில் தலை மைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன் பேசுகிறார். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, காந்திபுரம் பகுதிக்கழகம் சார்பில் பட்டேல் ரோட்டில் இன்று (8ம் தேதி) நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் அ.ஜாகீர் உசேன் பேசுகிறார்.
வடக்கு சட்டமன் றத் தொகுதி வேலாண்டி பாளையம் பகுதிக் கழகம் சார்பில் இன்று வேலாண்டிபாளையம் திலகர் வீதியில் நடக்கும் பொதுக்கூட்டத் தில் தலைமைக் கழகப் பேச் சாளர் அந்தியூர் சுப்பு (எ) சா.சுப்பிரமணியம் பேசுகிறார்.
சிங்காநல்லூர் சட்டமன் றத் தொகுதி சிங்காநல்லூர் பகுதிக் கழகம் -2 சார்பில் உப்பிலிபாளையம் பூங்கா திடலில் நாளை (9ம் தேதி) நடக்கும் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் எம்.ஜாபரும் வடக்கு சட்டமன்றத் தொகுதி மணியகாரன் பாளையம் பகுதிக் கழகம் சார்பில் நாளை காந்திமாநகர், செல்வ விநாயகர் கோவில் அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக்கும் பேசுகின்றனர்.
வடக்கு சட்டமன்றத் தொகுதி பாப்பநாயக்கன்புதூர் பகுதிக்கழக திமுக சார்பில் சீரநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவில் மைதானத்தில் நாளை நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் ஈரோடு இறைவன் பேசுகி றார். சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கழகம் -1 சார்பில் ஹோப் காலேஜ், ஜீவா வீதியில் நாளை மறுநாள் (10ம் தேதி) நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் அந்தியூர் சுப்பு (எ) சா.சுப்பிரமணியம் பேசுகிறார்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சிங்காநல்லூர் பகுதிக்கழகம் -3 சார்பில் நஞ்சுண் டாபுரம், மாரியம்மன் கோவில் வீதியில் நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி குமணன் உரையாற்றுகிறார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் பகுதிக் கழகம் திமுக சார்பில் திருச்சி சாலை, திருவள்ளுவர் நகரில் நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் க.அமிர்தலிங்கம் பேசுகிறார். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி கணபதி பகுதிக்கழக திமுக சார்பில் ரத்தினபுரி சாஸ்திரி வீதி மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன் பேசுகிறார்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கழகம் -2 சார்பில் வரும் 11ம் தேதி பாப்பநாயக்கன்பாளையம் காய்கடை மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் தலை மைக் கழகப் பேச்சாளர்கள் கவிஞர் ஈரோடு இறைவன், சொ.மதுமிதா ஆகியோர் பேசுகிறார்கள். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி. பெரிய கடை வீதி பகுதிக் கழகம் -1 சார்பில் காமராஜபுரத்தில் 11ம் தேதி நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் சைதை சாதிக், சி.கா.சுகன் மந்தரன் ஆகியோர் பேசுகிறார்கள்.
கோவை வடக்கு சட் டமன்றத் தொகுதி சாய் பாபா காலனி பகுதிக் கழகம் சார்பில் கண்ணப்ப நகர் நாராயணசாமி வீதியில் வரும் 11ம் தேதி நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் அந்தியூர் சுப்பு (எ) சா.சுப்பிரமணியம் பேசுகிறார். சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கழகம் -3 சார்பில் வரும் 12ம் தேதி உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில்திடலில் நடக்கும் பொதுக் கூட்டத் தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி குமணன் பேசுகிறார். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி. பெரிய கடை வீதி பகுதிக் கழகம் -2 சார்பில் 12ம் தேதி கோட்டை மேட்டில் நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் க.அமிர்தலிங்கம் பேசுகிறார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வடவள்ளி பகுதிக்கழகம் சார்பில் 12ம் தேதி வடவள்ளி பழைய பேருந்து நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன் பேசுகிறார். மேற்கண்ட பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளில்,கோவை நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், மேயர், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொது க்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்கள், அனைத்து சார்பு அணிகளின் தலை வர்கள், அமைப்பாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழக வட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு கேட் டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.