fbpx
Homeபிற செய்திகள்கோவை அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தேசிய நூலகர் தின விழா

கோவை அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தேசிய நூலகர் தின விழா

கோவையில் உள்ள அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் தேசிய நூலகர் தின கொண் டாட்டம் நடைபெற்றது.
தேசிய நூலகர் தினம் மற்றும் இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் நூலகம், புத்தக வேட்டை: ஆசிரியர் துப்பு சவால். - துப்புகளைத் தீர்த்து புத்தகத் தைக் கண்டுபிடி என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் 400 மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த துப்புகளைப் பின்பற்றி, அலமாரிகளில் இருந்து குறிப்பிட்ட புத்தகங்களைக் கண்டறிந்தனர். சரியான புத்தகத்தைக் கண்டு பிடிக்க எடுத்துக் கொண்ட நேரத்தின் அடிப்படையில் முதல் மூன்று பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அன்றைய தினம் பல்நோக்கு மண்டபத்தில் தேசிய நூலகர்கள் தினம் கொண்டாட்டம் மற்றும் பரிசு வழங்கும்விழா நடைபெற்றது. டாக்டர் டி. திலகவதி, உதவிநூலகர் வரவேற்றார். கலை மற்றும் சமூக அறிவியல் பள்ளியின் டீன் டாக்டர் சஷிபிரபாஜெயின் பார்வையாளர்களிடையே உரையாற்றினார். மாணவி கள் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தும் சமூகத்தில் நூலகங்களின் முக்கிய பங்கு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
உதவி நூலகர் டாக்டர் கே.மகாலட்சுமி, டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பங்களிப்புகள் மற்றும் நூலக அறிவியலின் ஐந்து விதிகளை அறிமுகப்படுத் தியது குறித்துப் பேசினார்.

தகவல் விஞ்ஞானி ஜெ.கீதா, சிறப்பு விருந்தினர் பேச்சாளரான டாக்டர் எம்.மந்திரிராசலம், நூலகர், டீன் (ARRA), கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் IQAC ஒருங்கிணைப்பாளரை அறிமுகப்படுத்தினார். டாக்டர் மந்திரிராசலம் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார், மேலும் மாணவிகள் நூலக த்தில் அதிகநேரம் செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கல்விப்புலத்தின் உதவி நூலகர் வி.சுமதி நன்றி கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img