தமிழ்நாடு அரசின் நீர் நிலைப் பாதுகாவலர் விருது பெற்ற நாமக்கல் சுற்றுச்சூழல் ஆர்வலர் காந்தியவாதி ரமேஷ் அந்த விருதை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதலமைச்சரின் நீர் நிலைப் பாதுகாவலர் விருது 2025 நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுநல ஆர்வலர் காந்தியவாதி ரமேஷ் தியாகராஜன் என்பவருக்கு கடந்த சுற்றுச்சூழல் தினத் தில் வழங்கப்பட்டது.
விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் பரிசாக வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த விருதை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் உமாவிடம் காண்பித்து, விருதாளர் ரமேஷ் தியாகராஜன் வாழ்த்துகள் பெற்றார்.
அப்போது அவரை வாழ்த்தி பேசிய மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் மாவட்டத்தில் நீர் நிலைகளைப் பாதுகாப்ப தற்கு பல்வேறு தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ரமேஷ் தியாகராஜனுக்கு இந்த விருது கிடைத்துள்ளதற்கு நன்றி களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து இதுபோன்று நீர்நிலை பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் இயற்கை ஆர்வலர் காந்தியவாதி ரமேஷ் தியாகராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் காந்தியவாதி ரமேஷ் தியாகராஜன், விருதுடன் கிடைத்த பரிசு தொகையை இயற்கை சார்ந்த திட்டங்களுக்கு செலவிடுவேன் என்று தெரிவித்தார்.