ஸ்கோடா ஆட்டோ இந்தியா, உயர் மதிப்பில் குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக விளங்கும் 5 நட்சத்திர தர மதிப்பீடுள்ள கார்களுடன், இவற்றின் அணுக்கம் மேம்படும்.
மேம்பாடு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில், “2025ல் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி எங்களுக்குப் புதிய சந்தைகளைத் திறந்துவிடும். குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்களில் சில மேம்பாடுகளைச் செயல்படுத்தி பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்“ என்றார்.
குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்களுக்கு இப்போது கிளாசிக், சிக்னேசர் மற்றும் பிரஸ்டிஜ் எனப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த மூன்று வேரியண்ட்களுடன் கூடுதலாகக், குஷாக் காருக்கு, மதிப்பு ரீதியாக ஓனிக்ஸ், பிரிமியம் ரீதியாக மாண்டே கார்லோ கிடைக்கும்.
இரு கார்களுமே 1.0 டிஎஸ்ஐ பெட்ரோல் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் – ஆட்டோமேடிக் மற்றும் 1.5 டிஎஸ்ஐ பெட்ரோல் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் – செவன் ஸ்பீட் டிஎஸ்ஜி ஆற்றலில் இயங்குகின்றன.
குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்களில் ஆறு ஏர்பேக்கள் பொருத்தப்பட்டுள்ளன.