fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலைரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலைரயில் இயக்கம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை இரயில் புறப்பட்டு சென்றது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அதில் பயணித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

பழமை வாய்ந்த மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த நிலையில் ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கியதையொட்டி மலை ரெயிலில் பயணம் செய்யவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம்_ ஊட்டி மற்றும் ஊட்டி_ மேட்டுப்பாளையம் இடையே கோடைகால சிறப்பு மலை இரயில் இயக்கப்படும் என்று அறிவிப்புச் செய்திருந்தது.

மேட்டுப்பாளையம்_ ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலைரெயில் சேவை நேற்று (29ம் தேதி) முதல் தொடங்கி ஜூலை 1ஆம் தேதி வரை அனைத்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதேபோல் ஊட்டி_ மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் அனைத்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

வழக்கம்போல் காலை 7 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை 9.10 மணிக்கு கோடைகால சிறப்பு மலைரெயில் புறப்பட்டு சென்றது.

சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர். கோடைகால சிறப்பு மலை ரெயிலுக்கு சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img