fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மே தினவிழா: 200 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலஉதவி வழங்கினார்...

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மே தினவிழா: 200 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலஉதவி வழங்கினார் நா.கார்த்திக்

கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில், மாநகர் மாவட்ட திமுக சார்பில் மே-1 உழைப்பாளர் தின விழா இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அனைவருக்கும் இனிப்பு களை வழங்கினார்.
பின்னர் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழி லாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், எல்பிஎப் ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலாளர் ப.வணங்காமுடி, மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.ஜெயக்குமார், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டெம்போ சிவா, மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், LPF ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பூபதி, சி.செல்வன், கார்த்திகேயன், வட்டக் கழகச் செயலாளர்கள் கே.ராமநாதன்,எஸ்.போஸ், டவுன் பா.ஆனந்தன், சாரமேடு இஸ்மாயில், கேசவன்ex.mc, கழக நிர்வாகிகள், LPF தொழிற்சங்க நிர்வாகிகள், திர ளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img