ஈரோடைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் ஒரு பன்முக எழுத்தாளர், அவரது எழுத்துக்கள் இந்தியாவின் பல்வேறு உண்மைகளை அறிய உதவும் என்று கோயம்புத்தூர் கௌமார மடத் தலைவர் குமரகுருபர சுவாமிகள் பாராட்டினார்.
ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் எஸ்ஆர்எஸ் எழுதிய மெய்ப்பொருள் கண்டேன், ஸ்ரீ ராமர்கோயில், மக்களுக்கான நாடாளுமன்றம், அறத்தின் ஆற் றல், தாய் வீடு எம்.ஜி.ஆர், மற்றும் வாழ்க் கையின் நீரூற்றுகள் ஆகிய 6 புத்தகங்களை அவர் வெளியிட்டார்.
பின்னர் குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது: பல்வேறு கருத்துக்கள் கொண்ட இப்புத்தகங்கள் நாட்டின் ஆன் மீகம், நெறிமுறை, வரலாற்று உண்மைகள், சுதந்திரப் போராட்டம், நாடாளுமன்ற நடைமுறைகள், ராமர் கோயிலின் வரலாறு மற்றும் சிறந்த தலைவர் எம். ஜி.ஆர் வாழ்க்கை போன்றவற்றை விளக் குகிறது.
புத்தகத்தின் உண்மைகள் எதிர்கால சந்ததியினர் கடந்த காலத்தின் பல விஷ யங்களைக் கற்றுக்கொள்ள உதவும். தமிழ் ஒரு பாரம்பரிய மொழி, ஐம்பெரும் காப்பியம், அகநானூறு, புறநானூறு திருக்குறள் உள்ளிட்ட 96 வகையான இலக்கியங்களைக் கொண்டுள்ளது.
பல இலக்கியங்களை தமிழ் அறிஞர் உவே சுவாமிநாத ஐயர் மற்றும் அவரது குரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகி யோர் வெளியிட்டனர்.
தற்போதைய தலைமுறையினர் பண்டைய தமிழ் மொழி, ஆன்மீகம் மற்றும் வரலாறு போன்றவற்றைப் பற்றி மேலும் அறிய இதுபோன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளாளர் கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், சக்தி மசாலா நிர்வாகிகள் துரைசாமி, சாந்தி துரைசாமி, எம்எல்ஏ டாக்டர் சி. சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ கே.வடிவேல் மற்றும் பலர் எஸ்ஆர்எஸ்&ன் எழுத்துக்கள், சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பாராட்டிப் பேசினர்.



