கேபிஆர் மில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியைத் தொடரும் வகையில் கேபிஆர் மில் பணியாளர்கள் கல்வி பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்துப் பெண் பணியாளர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் கேபிஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே பி ராமசாமி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இது குறித்து கேபிஆர் பெண் பணியாளர்கள் கல்வி பிரிவு முதல்வர் சரவண பாண்டி கூறுகையில்,
“இந்த ஆண்டு நடைபெற்ற பனிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய 22 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சியை கொடுத்துள்ளனர்.
இதில் பூமிகா எனும் மாணவி 545 மதிப்பெண்ணும், நீலாதேவி எனும் மாணவி 507 மதிப்பெண்ணும், பெற்று மில்லில் பணிபுரியும் மாணவிகளில் முதல் இரு இடத்தைப் பெற்றுள்ளனர்.
அவ்விரு மாணவிகளுக்கும் உயர்கல்வி வழங்க டாக்டர் கே பி ராமசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்” என்றார்.