fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு ஆட்சியர் பாராட்டு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடத்திய மாநில அளவிலான மல்யுத்த விளையாட்டு தெரிவுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கத்தொகையாக 11 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.5000 ரொக்க பணம் வழங்கினார்.

இந்திய பள்ளிக்குழுமம் சார்பில் சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்த விளையாட்டு தெரிவுப் போட்டியில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெறும் மல்யுத்த விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 வயதிற்குட்பட்ட பிரிவில் -என்.பிரியதர்ஷினி – 68 கிலோ, ஆர்.சௌமியா -72 கிலோ, ஏ.குணபாக்கியா – 76 கிலோ, ஆர்.பாலாஜி 130 கிலோ, கே.மொழிவானன் 125 கிலோ, 17வயதிற்குட்பட்ட பிரிவில் -எஸ்.கிருஷ்ணவர்ஷிணி 73 கிலோ, எஸ்.சம்யுக்தா 65 கிலோ, ஈ.ஹரிஹரன் 110 கிலோ, 14வயதிற்குட்பட்ட பிரிவில் -எஸ்.தாணுஸ்ரீ 62 கிலோ, ஏ.மோனிஷா 50 கிலோ, எம்.முகேஷ்அம்பானி 48 கிலோ ஆகிய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தங்கப்பதக்கம் வென்று மத்திய பிரதேசம் மாநிலம் இடிசா நகரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர்.ச.உமாசங்கர், மல்யுத்த பயிற்றுனர் ச.மெய்ஞானமூர்த்தி, தடகளப் பயிற்றுனர் ச.சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img