ஈரோட்டில் ஜித்தோகுகை கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கராத்தே தகுதி தேர்வு மற்றும் வண்ண பெல்ட் வழங்கும் தேர்வு நடந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜிதோகுகை அகில இந்திய துணைச் செயலர் ஏ.சக்திவேல், மாவட்டத் தலைவர் கே.எம்.சந்திரசேகர், செயலர் எம்.கோவிந்தராஜ், பொருளாளர் பி.மணி, தொழில்நுட்ப இயக்குநர் கீர்த்திவாசன், துணைத் தலைவர் யுதேஷ், துணைச் செயலர் எம்.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.