ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் 28வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கார்கில் வெற்றி வீரர் கர்னல் சின்னச்சாமி ஜெயவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், சான்றி தழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்தவர், “பொறியாளர்களுக்கு இந்திய ராணுவத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
கல்லூரியின் தனிநபர் சாம்பியனாக ஆண்கள் பிரிவில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பயிலும் ஆனந்தகுமார் என்ற மாணவனும், பெண்கள் பிரிவில் மூன் றாம் ஆண்டு விவசாய பொறியியல் பயிலும் ராஜ லட்சுமி என்ற மாணவியும் வெற்றி பெற்றனர். கல்லூரியின் ஒட்டுமொத்த சாம்பியனாக மூன்றாமாண்டு மாணாக்கர்கள் வெற்றி பெற்றனர். நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் வெங்கடாச்சலம் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் அண்ணாதுரை தலைமை ஏற்றார். தாளாளர் கமலமுருகன், செயலாளர் எஸ்.என்.தங்கராஜு, பொருளாளர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.