fbpx
Homeபிற செய்திகள்நந்தா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

நந்தா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார்.

பெங்களூர் BMS தொழில் நுட்பக் கல்லூரியின் உதவி பேராசிரியர் பி.ராஜேந்திரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். துறை தலைவர் டி.குமார், பெங்க ளுரு கிரிஸ்ட் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் எம்.உமாசங்கர், அமெரிக்காவின் சவுண்ட் ஹவுண்ட் ஏ.ஐ.-ன் உதவி இயக்குநர் நோபல் குப்பு சாமி, நியூயார்க் UBS ஃபினான்சியல் சர்வீஸின் உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தேசிங்க ராஜன், ஹிந்துஸ்தான் கல்லூரி முதல்வர் என்.ராமன், நந்தா கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா எஸ்.திருமூர்த்தி, நிர்வாக அதிகாரி வி.சி.சீனிவாசன், முதுகலை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் வி.வீரக்குமார் உரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img