இந்தியாவின் முன்னணி நகை ஆதார கண்காட்சி – இந்தியா நவரத்தினங்கள் மற்றும் நகை கண்காட்சியின் (ஜி.ஜே.எஸ்) தீபாவளி பதிப்பு – அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகை உள்நாட்டு கவுன்சில் (ஜி.ஜே.சி) வரும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஏற்பாடு செய்துள்ளது.
ஜி.ஜே.சியின் தலைவரும் ஜி.ஜே.எஸ் ஒருங்கிணைப்பாளருமான சயம் மெஹ்ரா கூறும்போது, ஜி.ஜே.எஸ் நிகழ்வின் தீபாவளி பதிப்பு பண்டிகை மற்றும் திருமண பருவங்களுக்கு முன்னதாக நகை பிரியர்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்றார்.
ஜி.ஜே.சி துணைத் தலைவர் ராஜேஷ் ரோக்டே கூறுகையில், பான் இந்தியா நகைக் கடைகளை ஒரே மேடையில் கொண்டு வருவதே ஜி.ஜே.எஸ்ஸின் நோக்கம். நகை வியாபாரிகள், கரிகர்கள், வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மேம்பாட்டிற்காக ஜி.ஜே.எஸ் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது.
தீபாவளி பதிப்பில் எங்களுடன் சேர அனைத்து நகை ஆர்வலர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை அழைக்கிறோம் என்றார்.
ஜி.ஜே.சி இணை ஒருங்கிணைப்பாளர் நிலேஷ் ஷோபாவத் கூறுகையில், இதுவரை பார்த்திராத டிசைன்கள் கண்காட்சியில் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் என்றார்.
நகைத் துறையின் அனைத்துத் துறைகளும் முன்னணி நிறுவனங்களுடன் இணைவதற்கும், தற்போதைய வணிகபோக்குகளை அறிந்துகொள்வதற்கும் ஜி.ஜே.எஸ். உலகத் தரம் வாய்ந்த தளத்தை வழங்குகிறது.