fbpx
Homeபிற செய்திகள்அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா, கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன், காணியாளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரிதங்காள், பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், அண்மையில் இந்தப் பள்ளியில் நடைபெற்ற குறுவட்டப்பட்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார் எம் எல் ஏ சிவகாம சுந்தரி.

தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கும் இதேபோல பி.உடையாப்பட்டி பகுதியில் செயல்படும் மாரிஸ்ட் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியருக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி.

படிக்க வேண்டும்

spot_img