கோவை மு.இராமநாதனின் (முன்னாள் எம்.பி) 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மற்றும் ராமநாதனின் மகனும் தீர்மானக்குழு இணைச்செயலாளருமான மு.இரா.செல்வராஜ் உள்ளிட்டோர் இராமநாதன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.